மேட்டூர் அணை
மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இது அணையைக்கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.இந்த அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும். அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர்களாகும். அணையின் உயரம் 120 அடிகள். மேலும் இதன் கொள்ளளவு 93.4 டி.எம்.சி. ஆகும்.
ஸ்ரீசைலம் அணை
ஸ்ரீசைலம் அணை ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் பகுதியில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை. இதுவே நாட்டின் 2 வது மிக பெரிய திறன் கொண்ட நீர்மின் திட்டமாக உள்ளது.
மொத்த நீளம் 512 மீட்டர்களாகும். அணையின் உயரம் 145 மீ ஆகும்.
துங்கபத்ரா அணை
துங்கபத்ரா அணை தென்னிந்தியாவின் புனித நதிகளுள் ஒன்று. இது கர்நாடக மாநிலம், ஹோஸ்பேட் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த அணையின் நீளம் சுமார் 498 மீ இவ்வணை 101 ஆயிரம் மில்லியன் கன அடி நீரை சேமிக்கின்றது.
கீழே உள்ள லிங்கில்









0 comments:
Post a Comment